வெள்ளி, 16 ஜூன், 2017

நான் காதல் கொண்ட மழைத்துளி !

சிடு சிடு மழையே நீ- உன்னைக்கண்டு 
மறந்தேன் இவ்வுலகை யோசிக்காமல், 
சட்டென்று என் மனதில் இருந்தும்.
உன்னைக் காணவே தவம்கிடந்தேன், 
ஏமாந்து போனேன் உன்னில் கண்ட ,
என் முகத்தைப் பார்த்த அந்நொடியிலே! 
வந்தாய் கடல் மெத்தையில், 
நான் தேடி அலைந்தும் கிடைக்காத, 
வெண்மேக முத்தாக என் கண்முன்னே. 
நீ செய்த மாயம் - மறைத்தது 
பல மென்னழகிய பெண்களை, 
எனது கண்முன்னே தெரிந்தாலும்... 
உன் அழகென்னை மயக்கியதைப் போல், 
வேறு எந்த மாதுவிடத்திலும்,
அவ்வளவு எளிதாக மயங்கிலேன் நான்! 
நீ வந்து விழுந்தாய் என் உச்சந்தலையில், 
நீந்தும் சிறு மீனாய் பாய்ந்தாய் என்னுள், 
அடிபட்ட மனம் கூட திகைத்து நின்றது! 
கவலை என்று பெயர் கொண்ட ஒன்று, 
சிதறியது நீ வந்த அந்த ஓர் கணத்தில், 
ஆசைப்பட்டேன் உன்னை அணைத்துக்கொள்ள, 
நனைத்துவிட்டாய் என்னை முழுமையாக !!!




                                                                                              - கிரிசேஷ்  குமார்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக