புதன், 7 ஜூன், 2017

வெண்ணிலவு

சிறகடித்து பறக்கும் ஆசைகள், 
வார்த்தைகள் பல பேசும் கண்கள், 
வாய் திறவா கேட்கும் எண்ணமது, 
மயங்கிக்கிடக்கும் மாலைப்பொழுதில், 
அன்று பார்த்தேன் அவள் முகத்தை, 
அந்த ஆற்று நீரில்தான் ஆசையுடன், 
வெண்முகம் மறைந்து விளையாட, 
கார்மேகம் அவளைப் பாதுகாத்து, 
நான் ஒருநாள் கொள்ளைப்போனேன், 
அவளுக்காக ...ஆம் அந்த நிலவுக்காக!!!



                                                                                             - கிரிசேஷ் குமார்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக