சனி, 3 ஜூன், 2017

சிறு கருத்துகள்

கரையோரம் நீந்தும் மீன்கள் பல, 
துளியசைவு உணர்ந்ததும் இடம்மாறும். 
காற்றடித்து அசையும் மரங்கள் கூட, 
உதிர்க்கும் சில இலைகளை - ஆனால் 
அதிலிருக்கும் பறவைக்கூட்டினைக் கலைக்காமல்.
நம் மனதில் கவலைகள் பல சூழ்ந்தாலும், 
சிறு நுனிப்புன்னகையை நம்முகத்தில் மலரவைத்தால், 
அதைப்பார்த்து மறுமொழியும் அப்பச்சிளம் குழந்தை, 
கவலைகள் அவை இன்னதென அறியாமல். 
பாலாகவே சில தோன்றினாலும், 
சிறு பனைப் பட்டதும் கள்ளாகும். 
பகை மறந்து பழக முயன்றால், 
நம் மனதில் அக்கவலை மறந்து, 
பிறர் மனதில் நம்பிக்கை கூடும் நம்மீது!



                                                                                      - கிரிசேஷ் குமார்    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக