வெள்ளி, 30 ஜூன், 2017

அந்த முகம்

தவறுணர்ந்தேன் நான் ஒரு நாள், 
தவித்தெழுந்தேன் திகைத்துநின்று -அன்று 
பெரும் தவம் செய்துள்ளேன் போலும், 
மறைந்த போன பிறவிகளனைத்தும், 
அந்த முழுமதி இத்தருணம் என்னுடன் இருக்க... 
நீண்ட பிரிவின் பின் பேசினேன் என்னுள்ளே, 
பிரிந்து திரிந்த ஆறுகள் சங்கமிக்கும் கடலிடையே 
அன்புடன் அவளுடன் - உற்சாகம் குறையாது 
செயல்பட்டேன் மனதில் அவள் முகத்தை பார்த்து. 
திரும்பியது அவள் பார்வை என்மேல், 
கதிரவனை பின்தொடரும் நிலவாக... 
என்னை அவளிடம் பகிர்ந்துகொள்ள, 
நின்றேன் கண் கசக்கி என்னை அறியாமல், 
கரம் கொடுத்து ஊக்கமூட்டியவள், 
வந்தால் அவள் என் கண்முன்னே, 
என்றும் கலையாத பகற்கனவாக !




                                                                                                                 - கிரிசேஷ் குமார்    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக