சிறைப்பட்டேன் அகத்தின் அடியில்,
ஆசைப்பட்டேன் மீளா அடைக்கலம் அடைய,
திகைத்து நின்றேன் என்னை அறியாது,
மனம் பேசா செயல் பல கண்டேன்,
மறை சூளுரை பற்பல கடந்தேன்,
மாசடைந்த மேகமது வீழ்த்தியது,
அதன் அகத்தை தூய்மையாகி,
மாரி பொழிந்த மழையாக இனிமையாய்!
மடமை அறிந்த அந்த மனதின்,
முகமாக இடம்பிடிப்பது நானாக விரும்பி,
மாறுபட்ட சிந்தனைகள் சில உணர்ந்தேன்,
சிலிர்த்திடும் உண்மைகள் என்பதனை,
பார்த்து ரசித்தேன் ஒரு சிறு ரசிகனாய்.
"நான் யார் ?", என்ற கேள்வி ஒன்றை
கேட்கிறேன் எனக்குள் நானே.
விடை அறியாது வினவினேன்,
வீழ்ச்சியின் விளிம்பில் இருந்து,
வெற்றியின் முதல் அடி நோக்கி,
சட்டென்று நகர்ந்து செல்ல...
- கிரிசேஷ் குமார்
ஆசைப்பட்டேன் மீளா அடைக்கலம் அடைய,
திகைத்து நின்றேன் என்னை அறியாது,
மனம் பேசா செயல் பல கண்டேன்,
மறை சூளுரை பற்பல கடந்தேன்,
மாசடைந்த மேகமது வீழ்த்தியது,
அதன் அகத்தை தூய்மையாகி,
மாரி பொழிந்த மழையாக இனிமையாய்!
மடமை அறிந்த அந்த மனதின்,
முகமாக இடம்பிடிப்பது நானாக விரும்பி,
மாறுபட்ட சிந்தனைகள் சில உணர்ந்தேன்,
சிலிர்த்திடும் உண்மைகள் என்பதனை,
பார்த்து ரசித்தேன் ஒரு சிறு ரசிகனாய்.
"நான் யார் ?", என்ற கேள்வி ஒன்றை
கேட்கிறேன் எனக்குள் நானே.
விடை அறியாது வினவினேன்,
வீழ்ச்சியின் விளிம்பில் இருந்து,
வெற்றியின் முதல் அடி நோக்கி,
சட்டென்று நகர்ந்து செல்ல...
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக