திங்கள், 10 ஜூலை, 2017

ஓர் உள்ளத்திற்கு !

நொடி முள்ளாய் பறந்து செல்ல,
நேர்கோட்டில் நடந்து பார்க்க,
நுனிமுகத்தில் சிரிப்பை காட்ட,
நினைத்தவுடன் மனம்விட்டு பேச,
நின்மனதில் நான் வந்து நிற்க,
நினைவெல்லாம் உன்முகம் பதிய,
நிழல் என்னைத் தொடர்வதை சற்று 
நானும் பார்த்து ஊக்கமடைய,
நேரம் தந்த சுழற்ச்சி என்னுள்,
நிற்காமல் என்னை நகர வைத்து,
நீட்டிய கரத்துடன் நீ என்னை அணைக்க,
நித்தமும் விரும்பினேன் உன் அன்பிற்காக!





                                                                                                     - கிரிசேஷ் குமார்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக