எனக்கு பிடித்த முகம் அது!
ரசித்துள்ளேன் அதனை சில நாட்கள்,
கவலைகள் பல மறந்தேன் அதை பார்த்தவுடன்,
குளிர்ந்தது என் உள்ளம் கடலென பரவி,
கடந்து செல்லும் முகமல்ல அது!
பார்த்தேன் என் சிரிப்பை அம்முகத்தில்,
பகிர்ந்தேன் என் மனநிலையை முழுமையாக,
இன்று என்னுடன் இல்லை அம்முகம்...
தேடுகிறேன் அதனை கண்முன் தெரிந்தும்,
விடை கிடைக்கவில்லை.....
"ஏன்?", என்ற வினாவிற்கு மட்டும்.
விரும்பா வார்த்தைகள் சில கசிந்த பிறகு,
கசப்பூட்டியது என்னுள்ளத்தில் ஆழ்ந்து,
பின் தோன்றவில்லை அதை பார்க்கும் எண்ணம்.
ஆனால், இன்னும் என் மனம்
விலக மறைக்கிறது ...விலக்க மறுக்கிறது அதே முகத்தை!
- கிரிசேஷ் குமார்
ரசித்துள்ளேன் அதனை சில நாட்கள்,
கவலைகள் பல மறந்தேன் அதை பார்த்தவுடன்,
குளிர்ந்தது என் உள்ளம் கடலென பரவி,
கடந்து செல்லும் முகமல்ல அது!
பார்த்தேன் என் சிரிப்பை அம்முகத்தில்,
பகிர்ந்தேன் என் மனநிலையை முழுமையாக,
இன்று என்னுடன் இல்லை அம்முகம்...
தேடுகிறேன் அதனை கண்முன் தெரிந்தும்,
விடை கிடைக்கவில்லை.....
"ஏன்?", என்ற வினாவிற்கு மட்டும்.
விரும்பா வார்த்தைகள் சில கசிந்த பிறகு,
கசப்பூட்டியது என்னுள்ளத்தில் ஆழ்ந்து,
பின் தோன்றவில்லை அதை பார்க்கும் எண்ணம்.
ஆனால், இன்னும் என் மனம்
விலக மறைக்கிறது ...விலக்க மறுக்கிறது அதே முகத்தை!
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக