சனி, 15 ஜூலை, 2017

காலத்தை கடந்த பெண்

நிழலில் வாழ்ந்த நதிமீனும், 
நீந்தி கடந்தன நிகளிருள் காலங்களை. 
ஆணின் அடிமை என்றழைக்கப்பட்ட அவள், 
அச்சாணியாக விளங்கும் நாட்கள் மலர்ந்தன. 
அடிபட்டு வீட்டினுள் முடங்கியவள்தான் -இன்று 
ஆசைப்பட்டதும் வெளியே வந்தால் துணிவாக. 
சமம் என்ற ஓர் வார்த்தை அன்று, 
வெறும் வார்த்தையாக இருந்தது. 
ஆனால், அதே சமம் என்ற வார்த்தை -இன்று 
உயிர் பெற்று எழுந்து நிட்கின்றது. 
எதிலும் குறைவானவள் அல்ல அவள், 
ஆணுக்கு நிகராய் எதையும் சாதிக்கும், 
மனவலிமை பெற்றவளாவாள் அவள். 
முதன்முதலில் இவ்வுலகை வியந்து பார்த்த அவள், 
இவ்வுலகம் அவளை திரும்பிப்பார்க்க செய்தாள் நின்று. 
நிழலுலகில் இருளாக  நின்றவள் அன்று ,
நித்தமும் திளைக்கிறாள் புகழ் நடுவில் இன்று. 
நித்தம் கண்ட கனவுகள் அனைத்தும் ,
மொத்தமாக அவற்றை செயல்படுத்தினால் இன்று. 
முறைவாசல் செய்துஇருந்த அவளை, 
முறை மாற்றி வளர்த்தான் அவள் தந்தை ஒருவன், 
பின் தோள் கொடுத்து நின்றான் அவள் கணவன் மற்றொருவன். 
இத்தனை காலம் அவள் முகம் பாரா அந்நிலவு, 
வெட்கத்தில் குனிந்தது அவள் மதி ஒளியைக் கண்டு. 
அடிமைப்பெண்ணாக இருந்த அவள் அன்று,
ஆளும் அரசியாக திகழ்கிறாள் அவள் இன்று .




                                                                                                     - கிரிசேஷ் குமார்     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக