வியாழன், 27 ஜூலை, 2017

மீன்கள்

கண் மூடா கனவு காணும், 
திறந்த வாய் மூடித் திறக்கும், 
வண்ணம் நிறை உடலிற்கும், 
ஒளிந்துகொண்டு எட்டிப்பார்க்கும், 
கண்சிமிட்டி என்னை ஈர்க்கும், 
அமைதி என்னும் அன்பைப்பரப்பும், 
அணியாத நகைகளையும் தேடிக்கொடுக்கும், 
ஒன்றோடு ஒன்று சேர்ந்திருக்கும், 
கரையோரம் கூடியிருக்கும் இவற்றைக்கண்டால், 
மீனாக மாறிவிடும் என் மனம் கூட !



                                                                                  - கிரிசேஷ் குமார்    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக