சிந்தனைகள் பல உண்டு இவ்வுலகில்,
அவற்றில் சில கண்டேன் எம்மனதில்.
என் கண்ணில் தெரிந்த உலகமொன்று,
நான் கனவு கண்டது மற்றொன்று.
கிடைத்தும் கிடைக்காமல் இருக்கும்,
இருப்பது மறைந்துபோய் கிடக்கும்.
சிறுவயதில் அழுதேன் சிரிப்பதற்காக,
இன்று நான் சிரிக்கிறேன் மனம்விட்டு அழுவதற்காக...!
சிறிய உணர்வுகளை சிறைபிடித்தேன்,
சிதறிய கவலைகளை நான் உணர்ந்தேன்.
அன்பினை காட்டினர் எனக்காக...
அரவணைத்துக் கொண்டனர் மனதார...
பல இரவில் கண்ணீர் வடித்தேன் -ஆனந்தமாக
இவ்வுலகில் எனக்கென்று இருக்கும் சிலரையெண்ணி!
காலம் மாறியதை நானோ மறந்தேன்.
காணும்போதெல்லாம் மாறாதிருக்க,
கரையை காக்கும் கல் அல்ல அது.
மனித மனம் தானே அதுகூட,
மாற்றம் கண்டது ஒரு மாலையில்,
ஏற்றுக்கொள்ள மறுத்தது என் மனது.
துள்ளிச் செல்லும் மானினைப் போல,
துடித்து எழுந்திட நான் நினைத்தேன்.
முடியுமா என்று தெரியவில்லை,
முடியும் வரை முயற்சிப்பேன் சளைத்திடாமல்!!!
- கிரிசேஷ் குமார்
அவற்றில் சில கண்டேன் எம்மனதில்.
என் கண்ணில் தெரிந்த உலகமொன்று,
நான் கனவு கண்டது மற்றொன்று.
கிடைத்தும் கிடைக்காமல் இருக்கும்,
இருப்பது மறைந்துபோய் கிடக்கும்.
சிறுவயதில் அழுதேன் சிரிப்பதற்காக,
இன்று நான் சிரிக்கிறேன் மனம்விட்டு அழுவதற்காக...!
சிறிய உணர்வுகளை சிறைபிடித்தேன்,
சிதறிய கவலைகளை நான் உணர்ந்தேன்.
அன்பினை காட்டினர் எனக்காக...
அரவணைத்துக் கொண்டனர் மனதார...
பல இரவில் கண்ணீர் வடித்தேன் -ஆனந்தமாக
இவ்வுலகில் எனக்கென்று இருக்கும் சிலரையெண்ணி!
காலம் மாறியதை நானோ மறந்தேன்.
காணும்போதெல்லாம் மாறாதிருக்க,
கரையை காக்கும் கல் அல்ல அது.
மனித மனம் தானே அதுகூட,
மாற்றம் கண்டது ஒரு மாலையில்,
ஏற்றுக்கொள்ள மறுத்தது என் மனது.
துள்ளிச் செல்லும் மானினைப் போல,
துடித்து எழுந்திட நான் நினைத்தேன்.
முடியுமா என்று தெரியவில்லை,
முடியும் வரை முயற்சிப்பேன் சளைத்திடாமல்!!!
- கிரிசேஷ் குமார்
Arumaiii
பதிலளிநீக்கு