செவ்வாய், 21 மார்ச், 2017

அவள் யார் ?

தினம் ஒரு விடியல் - வியந்து
உள்ளம் திகைத்திடும் நொடியில்
ஆச்சிரியத்திற்கு அளவில்லை - ஆனால்
அவள் அன்பின் முன்னாள் ஒன்றுமில்லை
கற்பனை உலகில் கண்டான் அவளை
தொலைந்தான் அவ்வுலகில் அவளைத் தேடி
அவள் முகம் படிந்த அவன் மனதில்
அவள் இருக்குமிடம் ஒளிரவில்லை
நம்பிக்கையோடு கழிந்த தினங்களெல்லாம்
நம்ப மறுத்தன அவன் அவளைக் கண்டதும்
சில்லரைபோல் சிரிக்கும் அவள் சிரிப்பின் பின்னல்
தன் சிரமத்தை மறந்து அலைந்த அவன்
கவலை இல்லாது தினம் சிரித்தான்
இவ்வுலகில் உள்ள வருத்தமெல்லாம்
கனவுலகில் உதிர்ந்தன உதிரிப்பூக்களாக
இவ்வாறு அவன் கனவில் உயிர் வாழ
உறுதுணையாக இருந்த அவள் ..... எவள்தானோ ?


                                                                                   - கிரிசேஷ் குமார்  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக