புதன், 22 மார்ச், 2017

பகற்கனவு

ஒரு நாள் பகல் கனவு 
வேலை ஓயாத அந்த நாள் 
ஒவ்வொன்றாக செய்துகொண்டிருந்த நான் 
உமிழ்நீர் சுரக்க இயலா வறட்சி 
தாகத்தில் தவித்த உயிர் எனது 
திரிந்தேன் கால் வலிக்க எங்கும் 
கிடைக்கவில்லை தண்ணீர் மட்டும் 
மயங்கி விழச்சென்ற என் முகத்தில் 
ஓர் சொட்டுத் துளிநீர் விழுந்தது 
அன்னாந்து அந்த வானத்தை நான் நோக்க 
"மகனே! உன் தாக்கத்தைக் கண்டு 
என் கண்கள் கலங்கின !",
என்றது அந்த கார் மேகம் .
விழித்தெழுந்தேன் கனவிலிருந்து 
கண்ணீரைத் துடைத்தேன் 
நிற்காமல் பெய்யும் அம்மாழையைக்கண்டு ....!


                                                                        - கிரிசேஷ் குமார்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக