பிறப்பு ... இவுலகில் வாழும் நாம் அனைவரும்
ஏதோ ஒரு புள்ளியில் சங்கமித்தவர்கள்.
இங்கு 'நீ' , 'நான்' என்ற கேள்விகளுக்கோ அதனை
சமாளிக்கும் விடையினிற்கோ இடமில்லை .
நான் பிறந்தேன் ஒரு தாய் வயிற்றில் அதேபோல்தான்
நீயும் . இவ்வையத்தில் நீடிக்கும் நாம் ஒவொருவர்க்கும்
பயம் , பக்தி தேவை , இதனை ஈடு கட்ட பிறந்ததையே
மதங்கள் . இன்னாருக்கு இன்னின்ன மதம் என்று
தேர்வு செய்வதற்கு நாம் யாருக்கும் உரிமையில்லை .
அவை நம் கடமையும் இல்லை . ஒருவன் ஓர் கல்லினை
அவனது தெய்வமாகவும் , வேந்தனாகவும் ஏன் அதை தன்
தாய் தந்தையராகவும் வைத்துப் போற்றும்
உரிமையுள்ளது .அதுவே அவன் மனதை அமைதியாகும் .
அனால் நம் சமுதாயம் பெருகப் பெறுக நமது
சிந்தனைகளும் கூடின . அப்போது ஆரம்பித்ததே
இம்மதப்போர் . ஒருவனின் தோற்றமும் சுற்றமும்
அவன் மதத்தைத் தேர்வு செய்ய ஆரம்பித்தன .
தனித்து நின்று ஒருவனால் அவனுக்குப் பிடித்ததை
ஏற்கஇயலவில்லை . "யார் இவர்கள் நமது உரிமையைப்
பறிப்பதற்கு?", என்று அவன் அன்று சிந்தித்திருக்க வேண்டும் .
அனால் , நமக்கு தெரிந்து இம்மனிதனின் மனமோ தனித்து
நிற்பதை விட்டு விட்டு கூட்டினை தேடும் பாங்குடையது .
அது அதன் பிழையன்று . இன்று , அதே சிந்தனைகள்
பரிணாம வளர்ச்சிபெற்றப்பின் உலக தத்துவத்தை உணர்ந்தன .
மகிழ்ச்சியான விஷயம் என்று இதனை படிக்கும் ஒவொருவரும்
எண்ண வேண்டும் . அனால் அது என்னவென்று தெரியவில்லை
கசப்பூட்டும் உண்மைகள் காயங்களையும் சேர்த்து ஊட்டுகின்றன .
இந்த உண்மையை நம்மால் நம்ப இயலாதது நிதர்சனம் .
ஒவொருவர்க்கும் ஓர் கருத்து என்னும் அடிப்படையில் எனது
கருத்தானது சிறிது மாறுபடும் பிழை இருந்தால் மன்னிக்கவும் .
நாம் பார்க்கும் அனைத்தும் விழிவழியே . ஆனால் , அவ்விழியே
மனதில் இருந்தால் .....??? "மனவிழி" ஆம் ஆராய்ந்து பார்க்கவேண்டியது
மதப்பிரிவினைகள் அல்ல !!! மனிதப் பக்குவத்தில் அமைந்த பண்பாடு .
விழியை திறக்கும் சாவியாக மனதை பயன்படுத்தினால்
ஒளிரும் இவ்வுலகம் துளிர்விட்டுத் தென்படும் என்பதே என்னுள்
அமைந்த ஓசை .
இப்படிக்கு விழி மூடியே மனதை திறந்து தங்களிடம் அவற்றைக்
கூறிடும் கிரிசேஷ் குமார்
மகிழ்ச்சியான விஷயம் என்று இதனை படிக்கும் ஒவொருவரும்
எண்ண வேண்டும் . அனால் அது என்னவென்று தெரியவில்லை
கசப்பூட்டும் உண்மைகள் காயங்களையும் சேர்த்து ஊட்டுகின்றன .
இந்த உண்மையை நம்மால் நம்ப இயலாதது நிதர்சனம் .
ஒவொருவர்க்கும் ஓர் கருத்து என்னும் அடிப்படையில் எனது
கருத்தானது சிறிது மாறுபடும் பிழை இருந்தால் மன்னிக்கவும் .
நாம் பார்க்கும் அனைத்தும் விழிவழியே . ஆனால் , அவ்விழியே
மனதில் இருந்தால் .....??? "மனவிழி" ஆம் ஆராய்ந்து பார்க்கவேண்டியது
மதப்பிரிவினைகள் அல்ல !!! மனிதப் பக்குவத்தில் அமைந்த பண்பாடு .
விழியை திறக்கும் சாவியாக மனதை பயன்படுத்தினால்
ஒளிரும் இவ்வுலகம் துளிர்விட்டுத் தென்படும் என்பதே என்னுள்
அமைந்த ஓசை .
இப்படிக்கு விழி மூடியே மனதை திறந்து தங்களிடம் அவற்றைக்
கூறிடும் கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக