புதன், 17 மே, 2017

நான் ஒளிந்துகொண்ட இடம்...

உயர்ந்து நிற்கும் மலையே உன்,   
கை இலைகளால் தட்டிக்கொடுக்கும், 
படர் மேகங்களை எளிதில், 
கவர்ந்திழுத்தாய் என் கண்களை,
பின் நின்றேன் நான் பார்வையைத் தொலைத்துவிட்டு ! 
எழில் நிறைந்த சோலைகளெல்லாம், 
அணிந்தது பசுமையை தன் ஆடைகளாக, 
சொட்டுச் சொட்டாக விழும் வானிலிருந்து, 
தரை பூசி மண் வாசம் வீசும் ! 
அவ்வழியில் செல்பவர்களுக்கு, 
மனம் மயங்க வைக்க, 
சற்றுமுன் மலர்ந்த பூக்களின் 
வாசம் கலந்து வீசும் தென்றலின், 
வண்ணம் தெரியாமல் இன்புற்றேன் நான் !
ஓவியமாய் தெரிந்த காட்சிகளில், 
நான் சென்று நின்றேன் சிறு துரும்பாக, 
அந்த அழகினிற்க்குள் ஒளிந்துகொள்ள !




                                                                                               - கிரிசேஷ் குமார்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக