உயர்ந்து நிற்கும் மலையே உன்,
கை இலைகளால் தட்டிக்கொடுக்கும்,
படர் மேகங்களை எளிதில்,
கவர்ந்திழுத்தாய் என் கண்களை,
பின் நின்றேன் நான் பார்வையைத் தொலைத்துவிட்டு !
எழில் நிறைந்த சோலைகளெல்லாம்,
அணிந்தது பசுமையை தன் ஆடைகளாக,
சொட்டுச் சொட்டாக விழும் வானிலிருந்து,
தரை பூசி மண் வாசம் வீசும் !
அவ்வழியில் செல்பவர்களுக்கு,
மனம் மயங்க வைக்க,
சற்றுமுன் மலர்ந்த பூக்களின்
வாசம் கலந்து வீசும் தென்றலின்,
வண்ணம் தெரியாமல் இன்புற்றேன் நான் !
ஓவியமாய் தெரிந்த காட்சிகளில்,
நான் சென்று நின்றேன் சிறு துரும்பாக,
அந்த அழகினிற்க்குள் ஒளிந்துகொள்ள !
- கிரிசேஷ் குமார்
கை இலைகளால் தட்டிக்கொடுக்கும்,
படர் மேகங்களை எளிதில்,
கவர்ந்திழுத்தாய் என் கண்களை,
பின் நின்றேன் நான் பார்வையைத் தொலைத்துவிட்டு !
எழில் நிறைந்த சோலைகளெல்லாம்,
அணிந்தது பசுமையை தன் ஆடைகளாக,
சொட்டுச் சொட்டாக விழும் வானிலிருந்து,
தரை பூசி மண் வாசம் வீசும் !
அவ்வழியில் செல்பவர்களுக்கு,
மனம் மயங்க வைக்க,
சற்றுமுன் மலர்ந்த பூக்களின்
வாசம் கலந்து வீசும் தென்றலின்,
வண்ணம் தெரியாமல் இன்புற்றேன் நான் !
ஓவியமாய் தெரிந்த காட்சிகளில்,
நான் சென்று நின்றேன் சிறு துரும்பாக,
அந்த அழகினிற்க்குள் ஒளிந்துகொள்ள !
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக