செவ்வாய், 23 மே, 2017

ஆசை

ஆசை எல்லாம் அன்பு, 
நான் நீயாக நாம் யாராக?
என்றும் என் உலகில்  
நிறையும் பல கற்பனைகள்,   
படிந்தது என் கனவில், 
எறும்பின் பின் ஒழிந்த யானையாக,
நிறையாத ஆசைகள் பல, 
நிறைவேற்ற துடித்துக்கொண்டிருக்கும்,  
உள்ளுணர்வுகள் சில என்னுள்,    
அனலை உறையவைத்து- அடை
மழை நீரை உருக்கச்செய்து, 
வெண்பனியிடம் மலரக் கூறி, 
கல்லை கடல் நீராக்கி,  
அதில் கால் நனைக்கும் நான், 
இன்பம் பெற விலை கேட்கிறேன், 
விலை உயிராக இருந்தாலும் கூட...!






                                                                                              - கிரிசேஷ் குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக