சனி, 6 மே, 2017

தூயன்பு

இயற்கையின் விளையாட்டின் ஒரு பகுதி,
நீ உனக்காக யாரும் இல்லை என நினைக்கும்போது,
நிழல் போல் வந்து செல்லும் கனவாக,
உன் சுற்றத்தின் அன்பு உனக்காக...
திசை மாறாது உன் திறமையை, 
நேர் திசைந்திடுவாள் உன் தங்கை, 
தடையற்று தயங்காமல் நீயும், 
தன்னம்பிக்கையோடு துணிந்து செல்ல, 
தாயன்பு காட்டும் அந்த நெஞ்சம், 
உன் தோழியாகவும் இருக்கலாம் -அற்று 
உன் தோள் பகிரும் துணையாகவும் இருக்கலாம். 
யவராக இருப்பினும் உன் வெற்றிக்காக, 
தாம் ஆனந்தப்படுவர் தத்தம் நிலை பாராமல், 
இவ்வாறு உனக்காக ...உனக்காக...
என்றிருக்கும் இவர்களை தூய அன்போடு, 
அணைத்துக்கொள் உன் மனதின் உயிராக !



                                                                                       - கிரிசேஷ் குமார்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக