செவ்வாய், 9 மே, 2017

கண் பார்த்த கவிதை !

கதிர் வளர ஏங்கும் பொழுது, 
சில்லென சிலிர்க்கும் தண்ணீர், 
மலர்மொட்டு திறக்கும் தாமரை, 
துளிநீர் கூட கசியா இலைகள், 
பனித்துளிகளைத் தாங்கும் அவற்றில், 
கதிரவனுக்காக காத்திருந்து,  
விடிந்தவுடன் விரியும் இதழ்கள், 
குளமெங்கும் வெண்சிவப்பு, 
இத்தனை அழகிகளை தாங்கிக்கொண்டு, 
தடுமாறாது நிற்கும் வேர்கள் நிமிர்ந்து, 
இவை அனைத்தையும் கண்ட, 
என் கண்கள் இமைத்தது குளிர்ந்து, 
கனவில் கூட மறவாது வந்திடும், 
காட்சி அமைப்பானது அந்த காலைப்பொழுது!




                                                                                                          - கிரிசேஷ் குமார்   

1 கருத்து: