சனி, 18 மார்ச், 2017

தீராத ஏக்கம்

கண் திறந்து நான் பார்த்த உலகில் 
கண் கலங்கி நின்ற என் தாய் 
அவளுக்கு இருந்த ஆனந்தத்தில் 
செய்வதறியா திகைத்து முத்தமிட்டாள் 
முதல்முறை என் அழுகையால் 
தன்  கண்ணீரைத் துடைத்தாள் அவள் 
நான் வளர்ந்த பிறகும் கூட 
அவள் வலி தெரியவில்லை எனக்கு 
பார்த்துப் பார்த்து தாங்கினாள் என்னைக்  
காலமெல்லாம் நான் சுமக்க அவளை
முடியா இயலாமையில் வாடியதென் உள்ளம் 
என்னை விட்டுச் சென்றால் அவள் 
என் மனதில் அவளது ஞாபகத்தோடு !


                                                                    - கிரிசேஷ் குமார்

1 கருத்து: