காற்றும் நட்பும் ஒன்றென்பேன்.
காற்றில்லாமல் உயிர் வாழ முடியாது,
நட்பில்லையெனில் உயிர் ஏதும் கிடையாது!
கடைமூச்சுக்கூட காற்றினைக் காதலிக்கும்...
கதை பேசிய கனவுகள் எல்லாம்,
தூய நட்பிற்கு உயிர் கொடுக்கும்.
மனதை கொள்ளை கொள்ளும் பூங்காற்றைப்போல்,
மதியை வென்றுகாட்டும் எம் நட்பு.
காற்றினில் கலந்திருக்கும் துன்பத்தை,
துடைத்து எடுத்து தோள்கொடுக்கும்,
துகில் மறையா நட்பெனது.
சொல்லாத பல நன்றிகளால்,
பிணைந்துகொண்டோம் ஒவ்வொருவராய்.
சூழ்ச்சி நிறைந்த இவ்வுலகில்,
அடிபட்டு நின்றோம் ஒருநாளில்,
துன்பத்தினில் வடித்தேன் ஆனந்தக்கண்ணீரை...
பிரச்சனை பல தீர்த்த என் நட்பினைக்கண்டு.
பிரிந்து செல்லும் முகில் அல்ல நாங்கள்,
சிறு சண்டை வந்ததும் பிரிவதற்கு!
பலநாட்கள் பேசாது இருந்தால் கூட,
மனதில் உள்ள அன்பென்பது தேயாது.
தனிமையில் தவித்திருந்த போது,
அனைத்துமாய் நின்றவள் அவளே!
ஆதரவற்று துவண்டிருந்த போது,
அரவணைத்துப் பேசியவன் அவனே!
பால் வேறுபடாது பழகும் இன்பம்,
பெற்ற என் நட்பானது திளைத்து நிற்கும்,
காலங்களைக் கடந்த காற்றாக ....!
- கிரிசேஷ் குமார்