செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

உயிர் பெற்ற வார்த்தைகள்

மதி மயக்கும் நீ ,
மதிக்கிறேன் உன் முழுமனதை ...
என்னைத் தேடி வந்தாய் நீ ,
என்னுடன் இன்பமாய் சேர்ந்திடவே ...
மயங்கவைக்கும் மணி உதட்டால்
மன்னிப்பாயா நான் செய்த தவறுகளை ...
உன் தாமரைக் கரத்தை என்னிடம் கொடு
தனித் தன்னம்பிக்க்கையோடு உயர்ந்திடுவேன்
எத்தனை உயரம் இருந்தாலும்
உன்னை மனதில்வைத்து ... சிறகடித்து ...
இத்தனை நாட்கள் இருந்த கவலைகள் எல்லாம்
இறந்துபோகும் உன் பார்வையைப் பார்த்து ,
என்னை அனைக்க நீ வேண்டும் எனக்கு ,
உன்னை உயர்த்த நான் உள்ளேன் உனக்கு .
மழைத்துளியைத் தாங்கும் பசும்புல்லைப்போல்
என் மனம் தாங்கும் உன்னை
என் வாழ்நாள் முடியும் வரை ..!!!



                                                                     - கிரிசேஷ் குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக