வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

உயிரில்லா உயிர்

என் தலையணைக்குத் தெரியும் 
நான் யார் என்று 
பலருக்குத் தெரியாத நான் 
பலநாள் பழகி இருந்தாலும் 
பகலிரவில் என்னை அணைத்திடும் 
அதற்கு மட்டுமே தெரியும் 
கண்ணீர் வடிந்த என் முகத்தைக் கண்டு 
எதற்காக நானே சிரித்தேன் என்று
அம்மழையையும் சேகரித்து 
என்னையும் அரவணைத்தது அன்போடு 
நான் எவ்வாறு கோபித்தாலும் 
என்னை அமைதிபடுத்திய அது 
பல நண்பர்களில் குறிப்பிட்டு எடுக்கும் 
சிறந்த நட்பில் ஒன்றாக திகழும்
உயிருள்ள பொருளாக தெரிகிறாய் !


                                                            - கிரிசேஷ்  குமார்     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக