திங்கள், 6 பிப்ரவரி, 2017

பட்டுப்பூச்சி

ஒரு சின்னப் பட்டுப்பூச்சி 
சிறகடித்தது என்னைப் பார்த்து 
இரு நீல வண்ணங்கள் 
மயில் மதியில் திரண்ட 
பச்சைக் கலந்த நீளம் ஒன்று 
கார்வண்ணன் போன்றிருக்கும் 
கருநீல வண்ணம் ஒன்று 
ஈர்த்தது என் கவனத்தை அது 
அங்கும் இங்கும் என்னைச் சுற்றி 
உன் முகத்தை பார்த்ததுப் போல் 
மயங்கினேன் நான்.. நின் எண்ணத்தில் 
அதை தெரியாதப் பட்டுப்பூச்சி 
நடனமாடியது ..அதனை கவனிக்காத 
என் முன்னாள் மெய்மறந்து ...
இவ்வாறு உன்னிணைப்பில் திரியும் 
என்னைப் பார்த்து சிறிதாவது 
சிரித்துச்செல் அப்பட்டுப்பூச்சியைப்போல் !




                                                               - கிரிசேஷ் குமார்    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக