செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

குப்பை

பார்க்கும் இடமெல்லாம் பரவிக்கிடக்கும் 
காற்றடித்தால் பறந்து செல்லும் 
நம் கையில் உள்ளவரை உயிரிருக்கும் 
கை விரித்தவுடன் மடிந்துபோகும் 
கலவையை சேரும் கூட்டம் 
கரையெங்கும் கண்ணில் பட்டும் 
அகற்றுவதற்குக் கூட ஆளில்லாது 
குளம் குளமாய் தேங்கிக்கிடப்பது குப்பையா ?
இல்லை , இவற்றை கண்டும் காணாமல் 
இருக்கும் ம(மா)னம் உள்ள நாம் குப்பையா ?
இவற்றில் குப்பை எது ...........? 




                                                                             - கிரிசேஷ் குமார்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக