திங்கள், 24 ஏப்ரல், 2017

முகம் தெரியாத எண்ணம்

அந்த சூரியனும் கதிர்மூடி மறைய, 
மதி உதிக்கும் மாலைப் பொழுதில், 
வாய் மூடி பேசும் வார்த்தைகள், 
மெய் உணர்ந்து கேட்கும் செவியும் -செல்லும் 
திசை அறியாது செல்லும் மனம் எனது, 
கடல் அலையாய் பாயும் எண்ணங்கள், 
திகைத்து நின்றேன் நான் அந்நிலஒளியில், 
நொடிகளைக் கடந்தேன் பல யூகங்களைப்போல, 
ஏன் இந்த வலி என்று தெரியாமல் நான்... 
கவலை ஏன் என பிறர் கேட்டும் கூறாது, 
அகம் மலரா என் முகத்தில் சிரிப்பைக் காட்டினேன்!


                                                                                                 - கிரிசேஷ் குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக