சனி, 8 ஏப்ரல், 2017

முகத்திரை

அகம் மலரா முகம் மலர்ந்து 
சிரித்துப் பேசும் வார்த்தைகளெல்லாம் 
கடற்கரையில் எழுதும் கல்வெட்டுக்களே !
குற்றம் கூறித் திட்டுவதைவிட 
பொய்யாக காட்டும் அன்பும் கூட 
நஞ்சாய் பாயும் உண்மையின் உயிரில் !
புறம் பேசி ஏமாற்றுவதை விட 
முகம் பார்த்து அகம் பேசலாம் ...
தப்புணர்ந்தால் திருத்துவதை விட்டுவிட்டு 
முகத்திரையோடு புறஞ்சாடல் உயர்வாகுமோ ? 


                                                                                                 - கிரிசேஷ் குமார்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக