நம் ஊருக்குச் சென்று
ஒரு வாரம் இருந்து
மண் வாசனை கமழும் பானையில்
பொங்கல் என்ற அன்னமிட்டு
பொங்கி வரும் வெண்மையில்
" பொங்கலோப் பொங்கல் ",
என கூச்சலிட்டு ...
சுற்றும் முற்றும் கூடி வந்து
விருந்து படைக்கும் வண்ணத்தோடு
கதிரவனால் கவலை தீரும் என்ற மறையில்
இனிக்கரும்பை ருசித்துப் பார்த்து
காளை , பசுவை வழிபட்டு
மகிழ்ச்சி அடையும் இதுவே எங்கள்
தமிழர் திருநாளாம் !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக