திங்கள், 23 ஜனவரி, 2017

நாம் !!!

காலம் பதில் சொல்லும் என்று
காத்திருந்த நாம் இன்று
நாம் சொல்லும் பதிலை
காலம் ஏற்று நடக்க செய்தோம்
கற்பனையில் கழித்த முப்பொழுதையும்
தேடிக் கண்டுபிடித்து மாற்றினோம் 
நாம் எல்லோரும் ஒன்றாக கைகோர்த்து 
கரையில் நின்று கூவினோம் நாம் அன்று 
மாறியது காலம் இன்று
அலை கடலாய் திரண்டு 
முழங்கினோம் வெண்சங்காய் 
நீதி கேட்டு கெஞ்சும் மனமில்லை 
பறை முரசுடன் கூறுவோம் 
மெய் நிகரான நீதியை நாமாகவே  !



                                                                           - கிரிசேஷ் குமார்  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக