திங்கள், 9 ஜனவரி, 2017

காலத்தின் களம்



பசுமை என்ற ஒன்று 
என் கல்லூரி முழுதும் சூழ்ந்தது 
பரவி நின்ற நிழல் குடைகள் 
பகிர்ந்து உண்ண உதவின 
சிறிய சிறிய மழைத்துளிகள் 
அவற்றை ப்ரமாண்டப் படுத்தின 
ஆனால் ...... இல்லை இன்று அவை 
மாறியது காலம் காற்றில்  
பசுமையான பாலைவனமாய் 
வீசித் திரிந்த தென்றல் காற்று 
வெறுங்கையை விரித்துக் காட்டியது 
வண்ணங்கள்  நிறைந்த மலர்ச்சோலை 
வாடிய முகத்தைக் காட்ட மறுத்தது 
மாறும் இந்த தோற்றம் 
விடியும் ஒரு நாள் பசுமையுடன் 
ஆம் ...... யாருக்கு எப்படி இருந்தாலும்
நான் நண்பனாய் நினைத்த அந்த மரங்களே !!!



                                          - கிரிசேஷ் குமார்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக