புதன், 25 ஜனவரி, 2017

அன்னையே ..

என்னை  அனைத்துத் தழுவிய 
என் அன்னையின் கைகள் 
காற்றடித்து கரைந்துபோயின 
முகம் மலர்ந்து சிரித்துப் பழகினேன் 
அவள் திருமுகத்தை தினமும் நோக்கி 
இன்று மனதினுள் அழுதாலும் 
கண்ணீர் தேங்குகிறது என் முகத்தில் 
கண் முன்னே நின்ற அவளை 
கண் மூடி தேடுகிறேன் இன்று 
என்னை தாலாட்டி வளர்ந்தவள் 
இன்று இல்லை இத்தரணியில்
மாற்றார் விழி முன் தெரியாத என் தாய் 
இருக்கிறாள் என்றும், என்னுள் ,என்னுடன்  !!!


                                                                            - கிரிசேஷ் குமார்      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக