பேனா முனையை நீட்டிய கையுடன்,
கண் கலங்கி அலைந்த மனம் எனது.
கவிழ்ந்து விழும் கப்பலில் கூட,
கரை சேரும் வழி ஒன்று உண்டு.
என் எண்ணத்தை ஈர்த்த அந்த வார்த்தை,
எழுத வைத்தது எந்தன் கதையாய்...
சில்லுச்சில்லாய் உடைந்த என் மனதை,
சீரமைத்தது தோழி அவள் எண்ணம் .
"உன்னால் முடியும் ...!
கண்ணாடியாய் உடைந்தால் என்ன ?
ஒற்றைப் பார்வையை பெருக்க ,
உன்னால் முடியும் ! ", என்று
கூறியது அவள் குரல் அன்று .
அதுவே என்னை எழுதவைத்தது இன்று ,
வாழ்க்கை என்பது இன்னதெனவென்று !
- கிரிசேஷ் குமார்
கண் கலங்கி அலைந்த மனம் எனது.
கவிழ்ந்து விழும் கப்பலில் கூட,
கரை சேரும் வழி ஒன்று உண்டு.
என் எண்ணத்தை ஈர்த்த அந்த வார்த்தை,
எழுத வைத்தது எந்தன் கதையாய்...
சில்லுச்சில்லாய் உடைந்த என் மனதை,
சீரமைத்தது தோழி அவள் எண்ணம் .
"உன்னால் முடியும் ...!
கண்ணாடியாய் உடைந்தால் என்ன ?
ஒற்றைப் பார்வையை பெருக்க ,
உன்னால் முடியும் ! ", என்று
கூறியது அவள் குரல் அன்று .
அதுவே என்னை எழுதவைத்தது இன்று ,
வாழ்க்கை என்பது இன்னதெனவென்று !
- கிரிசேஷ் குமார்
Super
பதிலளிநீக்கு